Monday, March 19, 2012

அலங்காரம் இல்லா
உன் கருவிழியோடு
வாழும் கொடுத்து வைத்த
கண் இமைகள்,
எனக்கான ஜென்மதண்டனைகள்!!

எனக்காக துடித்ததைவிட
உனக்காக துடித்ததுதான் அதிகம்
என் இதயம்!

உண்மையுள்ள என்னுடைய
அத்துணை கவிதைகளையும்
தோற்கடித்தது உன்னுடைய
பொய்யான சினுங்கல்!!

உயிரில்லா உன் பெயரை
எழுதிப்பார்க்கும் வேளையிலே
சில சமயங்களில் நான்
உயிர் பெற்றுக்கொள்கிறேன்!!

No comments: