Monday, March 19, 2012

காற்றோடு விளையாடும்,
உன் கூந்தல் எனும்
வீணை கம்பிகளை மீட்டும்!
இராவணன் ஆவேனோ?

உலகில் உள்ள அத்தனையும்
பெண்ணாகி போனாலும்
உன்னை மட்டும் உச்சி முகரும்
இராமன் ஆவேனோ??
உன்கையில் இருக்கிறது..
முடிவும், என் முடிவும்..!!

அலங்காரம் இல்லா
உன் கருவிழியோடு
வாழும் கொடுத்து வைத்த
கண் இமைகள்,
எனக்கான ஜென்மதண்டனைகள்!!

எனக்காக துடித்ததைவிட
உனக்காக துடித்ததுதான் அதிகம்
என் இதயம்!

உண்மையுள்ள என்னுடைய
அத்துணை கவிதைகளையும்
தோற்கடித்தது உன்னுடைய
பொய்யான சினுங்கல்!!

உயிரில்லா உன் பெயரை
எழுதிப்பார்க்கும் வேளையிலே
சில சமயங்களில் நான்
உயிர் பெற்றுக்கொள்கிறேன்!!